நீ உன் மரணத்தை முன்கூட்டியே காண முடியுமா?
ஒரு அழகிய காலை,
மதியத்துக்குள் நீ இல்லையென்று
நீயே உணர முடியுமா?
உன் வலது தோளில் அமர்ந்திருக்கும்
"புத்த பறவை"!
உன் முடிவின் நேரத்தையும்
இடத்தையும்
முறையைவும்
நிசப்தமாக உனக்கு சொல்லி விடுமா?
என் தாத்தாவின் விஷயத்தில்
அது எப்படி உண்மையானது?.
அன்று காலை அவர் எழுந்தார்.
இன்று வரைக்கும்
தானியத்தில் சம்பளம் கொடுக்கும்
குடும்ப நாவிதனிடம் சென்று
முடி வெட்டினார், குளித்தார்,
இயல்புக்கு மாறாக !
புதிய சட்டையை அணிந்தார்.
பின்னர் நெற்றியில் விபூதி பூசி,
கிராமத்து கோவில்கள்
அனைத்துக்கும் சென்று
திரும்பும் வழியில்,
எப்போதும் சந்திக்கிற
தோழர்களை பார்த்தார்.
வீதி முடிவில் உள்ள
ஆலமரத்தின் கீழ்
தங்கி சிறிது நேர அரட்டை !
நண்பகலில் வீடு திரும்பும்போது,
நாங்கள் குழந்தைகள்
அப்பா சத்தமாக கேட்டுக் கொண்டிருந்த
பாட்டுக்கு .நடனமாடி கொண்டிருந்தோம்!
தாத்தாவின் கோவம் அப்பாவின் மேல்
ஒரு இந்திய தந்தையாய்
"நான் உன்னை எப்படி அணைப்பது!
நான் விடைபெறுகிறேன் மகனே"!
கண்கள் பரிமாறிய வார்த்தைகள்.
பிறகு சமையலறையில் அமர்ந்து
பாட்டி அளித்த சாப்பாட்டை உண்டார்.
அவரிடம் நன்றி சொன்னாரோ?
இல்லை, அவர் செய்த தவறுகளுக்காக
மன்னிப்பு கேட்டாரோ?
அறிய முடியவில்லை.
அதன் பிறகு,
மற்றொரு வீட்டுக்குள் சென்று
தூங்கினார்.
பாட்டி அவரை எழுப்ப
சென்றபோது
நிலத்தில் சிறுநீர் கிடந்தது.
அவர் தூக்கத்தில்
இறந்திருந்தார்.
விரைவாக, வலியில்லாமல்,
யாருக்கும் சுமையாக இல்லாமல்.
அக்கம்பக்கத்தினர்
அதை ‘நல்ல இறப்பு’ எனக் கூறினர்.
நீங்களும் அதைத்தான் சொல்லுவீர்கள்
ஆனால் தூங்குவதற்குமுன்
சிறுநீர் கழித்திருக்கலாம்.
"புத்த பறவைகள்"
அதைச் சுத்தமாக இருக்க விடாமல்,
சந்தேகம் எழாமல்
சில தடயங்களை விட்டிருக்கலாம்!
*அஜய்*
It is a translation of English poem written in Substack by Ajay. M.