என் 'நவகவி' சொன்ன
சொல்லொன்று
அக்னி குஞ்சாய்
பெருங்காட்டிடைப்
பொந்திலிருந்து வேடிக்கை பார்க்க!
என் 'அய்யன்' அருளிய
ஈரடிச்சொல்
அகிலமெங்கும்
அறம் பரப்ப!
இனியதாய் சில
இன்னிசையாய்ப் பல
ஈரமாய்ப் பல
கண்ணீராய்ச் சில
குழப்பமாய்ப் பல
ஆறுதலாய்ச் சில
போரைத் தொடங்கச் சில
அமைதியை நிலைநாட்டப் பல
எல்லாச் சொற்களும்
ஏதோ ஒன்றைச் செய்ய!
எனது சொற்கள் மட்டும்
ஊமையின் கற்பனையில்
தோன்றியது போல்
விவரிக்க முடியாமல்...
No comments:
Post a Comment